போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்...

போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான் சேந்து குடிச்சா அது சோஸலிசம்தான். இந்த வரியின் மூலம் என்னதான் சொல்ல வருகிறார்கள், கேடுகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் திரைப்படங்களின் உளரல்களுக்கெல்லாம் விளக்கம் தேடினால் அதைவிட ஒரு கேலிக்கூத்தான விஷயம் வேறு ஏதும் இருக்காது..


எத்தனையோ எரி சாராயச் சாவுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் திருந்துவோர்தான் இல்லை.


முன்பெல்லாம் சாரயம் குடிப்பவன் என்றாலே சமூகத்தில் ஒரு மதிப்பு(?) இருந்தது, அவனின் மனைவி மக்கள் படும் மன உலைச்சலுக்கு எல்லை இல்லை, சமூகத்தின் பார்வையில் அவன் ஒரு குற்றவளியாக பார்க்கப்பட்டான்.


ஆனால் இன்றோ கல்யாணம் என்றாலும், கருமாதி என்றாலும் "தண்ணி" பார்ட்டி வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. கல்யாணம் என்றால் குஷியாக கொண்டாடுவதற்கும், கருமாதி என்றால் துக்கம் தீர்ப்பதற்க்கும் என்று காரணங்கள் பல சொல்லப் படுகின்றன.


இளைஞர்களில் பீர் குடிக்காதோரைக் காண்பது அரிது. "பீர் குடிச்சா குளிர்ச்சி" என்ற கொள்கை வெற்றி பெரும்பாலான இளைஞர்களின் தொப்பக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாகிப் போனது.


வியாழன் இரவு வந்து விட்டால் போதும், இங்கு துபையில் வசதிக்கு தகுந்தவாறு தண்ணீர் தாண்டவமாடும். 20 திர்ஹம் பாட்டில் நம் உழைக்கும் வர்க்கங்களுக்காக, கன்ஸ்ட்ரக்ஸன் பணி அல்லது க்ளீனிங் கம்பெனி பணியில் ஆறு நூறு, எழு நூறு ஊதியம் வாங்குவோர்தான் இந்த உழைக்கும் வர்க்கங்கள். "வாரத்தில ஒரு நாள்தானே மச்சான்" என்பது படிப்படியாக நாட்கணக்காகும். பிறகு வாங்கும் சம்பளம் கடனைச் செலுவதற்கே சரியாகும்.


ஹோட்டல் "பார்"களில் காசுக்காக ஆடும் இளம் பெண்களின் ஆட்டமும் சேர்ந்து கொள்ள குடித்து கும்மாளமிடுவோர் கைநிறைய சம்பளம் வாங்கும் கணவான்கள்.


மும்பையில் புது வருட இரவுக் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டது போதையின் தூண்டுதாலால்தான்.


மது அருந்துவதென்பது இன்று சர்வசாதரண ஒரு விஷயமாகிப் போனது காலத்தின் கோலம்.


போதையைப் பற்றியெல்லாம் ஒரு பதிவு என்று எண்ணும் அளவுக்கு இன்று இக் கொடிய பழக்கம் சமூகத்தில் புரையோடிப் போயுள்ளது.

இதன் மூலம் நன்மை இருக்கா இல்லை தீமை இருக்கா என்பதல்ல ஆராய்ச்சி. தீமைதான் உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இவ்வளவு மோசமான ஒரு பழக்கம் எவ்வாறு நம் சமூகத்தில் சர்வ சாதரணமாக நுழைந்தது?.

மலையாளி கொலையாளி ஏன்?...

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ், பிலிபைன்ஸ், ஏன் சோமாலிய நாட்டினாரால் கூடச் செல்லமாக அழைக்கப்படும் பெயர்தான் "மலையாளி கொலையாளி".



இனி..



கொஞ்சம் சீரியஸ்,


கொலையாளி என்பது தமிழ் போல் தோன்றினாலும் இது ஒரு மலையாள வார்த்தைதான், கொலையாளி என்ற புணைப் பெயர் யாரால் வைக்கப் பட்டிருக்கும் என்று எண்ணுகிறீர்கள், அதுவும் மலையாளிகளால்தான்.



இங்கு அரபு நாட்டில் புதிதாக ஒரு மலையாளியை அவர்கள் சந்திக்க நேர்ந்தாலே அவரிடம் மாவட்டம், ஊர், தெரு மற்றும் வீட்டின் அடயாளம் வரைக் கூறி குசலம் விசாரிக்கும் நல்ல பண்பை தன்னகத்தே கொண்ட மலையாளிகள் இந்த அவப் பெயருக்கு சொந்தக்காரர்களாக்கிய காரணி என்னவாக இருக்க முடியும்.



வெரி சிம்பிள்,



அடுத்தவரின் குறைகளை ஆராய்ந்து திரியும் இவர்கள், அதே தவறை இவர்கள் சர்வசாதரணமாக செய்வதுதான்.


போட்டுக் கொடுப்பதை தன் பகுதி நேர வேலையாக மிகப் பலர் இவர்களில் செய்வார்கள், இதற்கு மலையாளத்தில் "பாரை வைத்தல்" என்று பொருள் படும். போட்டுக் கொடுப்பதில் நாடு வித்தியாசம் இவர்கள் பார்ப்பதில்லை.


ஏன் மலையாளிகளில் மாத்திரம்தான் இருக்கிறார்களா? நம்மில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது விளங்குகிறது. நம்மில் பத்தில் மூவர் என்றால், அவர்களில் பத்தில் ஏழு பேர் இருப்பார்கள்.



மேலும் தான் மற்றும் தனது சொந்த பந்தம் மட்டுமே வளமான வாழ்வு வாழ வேண்டும் என்ற உயரிய (?!) கொள்கைக்குச் சொந்தக்காரர்கள்.



சமீபத்தில் ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு ஆந்திராக் காரருக்கு விசிட் விசாவை எம்ளாய்மெண்ட் விசா என்று ஏமாற்றி விற்ற பெருமை இந்த "ஷகீலா" தேசத்துச் சொந்தக்காரர்களையேச் சாரும்.


ஏமாற்றப் பட்ட ஆந்திராக்காரரின் நிலைதான் இந்தப் பதிவு எழுத தூண்டியது.

நமக்கு சீரியஸ் பதிவு என்றாலே கொஞ்சம் அலர்ஜி...

எனவே..

இனி...

கொஞ்சம்..

கிண்டல்..

நமக்கெல்லாம் 20 20 வேர்ல்ட் கப் இறுதி ஆட்டம் (இந்தியா Vஸ் பாகிஸ்தான்) ஞாபகமிருக்கும்.

வெற்றிக்கு 6 பந்தில் 13 ரன்கள் பாகிஸ்தான் எடுத்தாக வேண்டும் , கடைசி விக்கெட் முகமது சமியுடன் ஜோடி சேர்கிறார், அடித்து ஆடிக் கொண்டிருக்கும் மிஸ்பாவுல் ஹக்.

ஆட்டத்தின் இறுதி ஓவர்.

இறுதி ஓவரைப் போட வருகிறார் ஜோகிந்தர் சர்மா..

அனைவரின் முகத்திலும் டென்ஷன்..

ஓஓஓஓஓஓடி வந்து முதல் பாலை போட்டார் அது எட்டாப்பந்து.

நவ் ஸ்கோர் கம்பாரிசன்.

6 பந்தில் 12 ரன்கள்.

அடுத்த பந்தில் ரன் எதுவும் இல்லை.

5 பந்தில் 12 ரன்கள்.

அடுத்த பந்து வழக்கம்போல் டாஸாகிறது விடுவாரா மிஸ்பா கோட்டுக்கு வெளியே அனுப்பி ஸிக்ஸாக்குகிறார்.

4 பந்தில் ஆறு ரன்கள்,

நம் அனைவர் வயிற்றிலும் புளி, சரி பைனல் வரையாவது வந்தோமே என்று மேட்ச் பார்க்கும் அனவரும் மனதை தேற்றிக்க் கொள்கிறோம்.

அடுத்தப் பந்தும் எறியப்படுகிறது அதை லாவகமாக யாரும் இல்லாத பக்கமாக மிஸ்பாகுல் தூக்கி விட நினைத்து அவ்வாறே செய்கிறார்.

பாவம் அவருக்கு எங்கே தெரியப்போகிறது நாட்டின் எந்த ஒரு மூலையிலும் ஒரு மலையாளி இருப்பான் என்பது, அநியாயமாக ஸ்ரிசாந்த் கையில் பந்தைக் கொடுக்கிறார். இந்தியாவும் கோப்பையைத் தட்டி சாம்பியன் ஆகிறது.

இப்பொழுது கூறுங்கள் கணம் பொருந்திய நீதிவான்களே!


பாகிஸ்தானிக்கு "மலையாளி கொலையாளி" தானே. :))))

அன்புள்ள அப்பாக்களுக்கு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

காலைக் கடனை முடித்து விட்டு, தன் மகனின் படுக்கையறையை கடந்து செல்லும் தந்தைக்கு நம்ப முடியாத ஆச்சரியம், தினமும் காலை தான் கண் விழித்து மணி நேரங்கள் கடந்தும் எழுந்திரிக்க மறுக்கும் மகனின் படுக்கை அறை இன்று பெட்ஷீட் மடிக்கப்பட்டு, படுத்த சுவடே தெரியாமல் மிகவும் "க்ளீனாக" இருப்பது கண்டு ஒரு நிமிடம் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்..


"அப்பாவிற்கு" என்ற தலைப்பிட்ட கடிதம் ஒன்று தலையணையின் கீழ் மடிக்கப்பட்டு இருப்பது படுக்கையறையை ஆச்சரியத்துடன் உற்று நோக்கும் அவரின் கண்களில் படுகிறது.


கைகளில் நடுக்கம் மேலிட மனக் கசப்புடன் கடிதத்தை திறந்து படிக்க ஆரம்பிக்கிறார்.




அன்புள்ள அப்பாவிற்கு,


வருத்தமான கவலையுடன் தங்களின் மகன் எழுதிக் கொள்வது, இந்தக் கடிதம் தங்களை வருத்தமுறச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் இந்த விஷயத்தை உங்களின் முன்போ அல்லது மம்மியின் முன்போ சொல்லும் தைரியம் எனக்கு இல்லை.
நான் "ஸ்டேசி"யை மனதார நேசிக்கிறேன்,
அவளின் அங்கமெங்கும் வண்ணக் கோலம் பூண்டிருக்கும் "டாட்ட்டூஸ்", அவளின் சரீரத்தை நசுக்கி நாயாக்கும் அவள் அணியும் இருக்கமான ஜீன்ஸ் & T சர்ட், மேலும் அவள் என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவள், இத்தனை குறைபாடுகளை வைத்துக் கொண்டு நீங்கள் எங்கள் காதலை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, நியாமற்றதும் கூட, ஆகையால்தான் நான் வீட்டை விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.


நான் அவளுடன் ஓடியது அவள் மீது உள்ள வெறும் ஈர்ப்பு மட்டும்தான் காரணம் என்று தயவு செய்து எண்ணி விடாதீர்கள், அவள் இப்பொழுது மூனு மாசம் முழுகாமலிருக்கிறாள்.



குளிர்ப்பிரதேசத்தில் உள்ள அவளின் எஸ்ட்டேட்டில் தங்குவதற்கு முடிவெடுத்துள்ளோம், அங்கு எங்களின் வாழ்க்கை சந்தோஷமாக செல்லும்.
மேலும் அறிவியல் துணை கொண்டு "AIDS" எனும் கொடும் நோய்க்கு ஆளாகியிருக்கும் "ஸ்டேசி"யை குணப்படுத்த முடிவெடுத்துள்ளேன். அவள் நிச்சயம் குணமடைந்து உங்களுக்கு நிறைய பேரக்குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பாள்.


எனக்கு 15 வயதுதானே ஆகிறது என்று கவலை கொள்ளவேண்டாம், நீங்கள் எவ்வாறு என்னைக் கவனித்துக் கொண்டீர்களோ, அதேபோல் "ஸ்டேசி" -யும் என்னைக் கவனித்துக் கொள்வாள்.



ஒரு நாள் உங்களை உங்களின் பேரக் குழந்தைகளுடன் நிச்சயம் நானும் ஸ்டேசியும் வந்து சந்திப்போம்.



இப்படிக்குத் தங்களை மிகவும் நேசிக்கும் உங்களின் அன்பு மகன்,


ஜோசுவா.

.

.

.

.

.




அப்பா!

ஒரு நிமிடம்.


மேலே எழுதியிருக்கும் எதுவும் உண்மையில்லை!. நான் தற்பொழுது ஜான்சனின் வீட்டில் தான் தங்கியுள்ளேன். வாழ்க்கையில் மேலே கூறப்பட்டது போல் எத்தனையோ மோசமான விஷயங்கள் உள்ளது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தவே அவ்வாறு எழுதினேன்.


இப்பொழுது உங்களின் நெஞ்சின் மீது கை வைத்து கூறுங்கள் கிச்சனின் டைனிங் டேபிளில் இருக்கும் எனது "Progress Report" இவையனத்தையும் விட மோசமானதா?

இராமநாரயணன் மற்றும் ஸ்டீபன் ஸ்பேல் பர்க்..

"Tsunami and Shark" என்ற படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனுக்காக சென்னை வந்து திருவல்லிக்கேணியில் அறை எடுத்து தங்கியிருக்கும் ஸ்டீபன் ஸ்பேல்பர்க், காலை வாக்கிங்குக்காக மெரினா செல்கிறார். கதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்து அடுத்த சீட்டில் அஜராகிறார் கண்ணாடி அணிந்த குரங்கு மற்றும் யானையுடன் இராமநாரயனன். பெரிய உருவம் (யானை) அருகில் நிற்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்டீவைப் பார்த்து கிண்டல் செய்கிறார் இராம், "என்னப்பூ, பெரிய பெரிய மிருகங்களையெல்லாம் வச்சு படமெடுத்த கில்லாடி நீங்க, இந்த ஜூஜுபி யானையைப் பார்த்து பயப்படறிங்களே?". "நாரயணா நான் யானையைப் பார்த்து பயப்படல அதுக்குப் போட்டு உட்டுக்கிறீங்களே ஒரு கண்ணாடி அதப்பாத்துதான் பயமே" என்று சமாளிக்கிறார்.
"என்ன திடீர் சென்னை விஜயம்?""
"புது படப் புராஜக்ட், அது சென்னையை பேஸ் பண்ணியுள்ள கதை அதுதான் இங்கேயே கதையை டிஸ்கஷன் பண்ணி இப்படியே சூட்டிங் ஆராம்பிச்சிராலாம் என்று தயாரிப்பாளர் சொன்னார், நானும் OK ன்னு சொல்லிட்டேன்"
சென்னையை பேஸ் பண்ணியுள்ள கதை என்றவுடன் இன்ட்ரஸ்டிங்கான் இராம.. "என்ன கதை சொல்லுங்களேன்"
"இதுதானே வேண்டாங்கிறது, அப்புறம் எங்கிட்டேயே கதையைக் கேட்டுட்டு ஒரு அம்மன் படத்த அவசர அவசரமா எடுத்து ரிலீஸும் பண்ணிருவீங்க"
உடனே கோபமடைகிறார் இராமநாராயணன்.
"என்ன இராம் நான் சும்மா விளையாட்டுக்குத்தானே சொன்னேன், இதுக்குப்போய் கோவிச்சுக்கிறிங்களே, ப்ளீஸ் ஸாரி".
"அதுக்கில்ல ஸ்டீவ் எங்க ஊருக்காரனுங்க கூட இருந்தே குழி பறிக்கிறவனுங்க, பாருங்க எங்கேயோ இருந்து நீங்க வந்திருக்கிறிங்க, உங்ககிட்டேயே என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்கானுங்க"
"ஆமாம் உங்க ஊருக்காரங்க சொல்லைன்னாலும்" மனதில் கவுண்டமணி பாணியில் சிறிக்கிறார், "சே... சே.. அப்படியெல்லாம் யாரும் எங்கிட்ட சொல்லலை, நானாத்தான் சும்மாக்காச்சிக்கும் சொன்னேன், என்னை நம்புங்க"
மனதைத் தேத்திக் கொண்டு சகஜ நிலமைக்குத் திரும்புகிறார் இராமநாராயணன்.
"என்ன இராம்? உங்க புதுப்படம் எதையும் காணோம்".
"நான் இப்பத்தான் ஒரு புதுப்பட புராஜக்ட் வேலையில் மும்முரமா இறங்கியிருக்கேன்"
"அம்மன் படம்தானே?"
"பாருடா, எப்படி கண்டுபிடிச்சீங்க" ஆச்சரியமாக
"எல்லாம் ஒரு ஜோசியந்தேன்"
"ஹாலிவுட்காரன் ஹாலிவுட்காரன் தான்" மனதில் சிலாகிக்கிறார்.
"ஆனாலும் நீங்க ரெம்ப திறமையானவருங்க, பாருங்க ஒரே டைப் கதையை திரும்ப திரும்ப பேரை மட்டும் மாத்தி கொடுத்து மக்களை அசத்திப் புடுறீங்க(!)" ஸ்டீவ்.
"அதன் இரகசியம் என்னன்னா? இங்கே நிறைய அம்மன் சாமிங்க இருக்கு அதனால என்னால ஈசியா ஒரே டைப் கதையை ஒவ்வொரு அம்மன் பேரிலயும் லேசா கதையை மாத்தி எடுத்துற முடியுது. நீங்க மட்டும் என்ன சும்மாவா?. ஒரு மிருகம் ஒன்ன கண்டுபிடிப்பீங்க, அது உடனே வேதியல் மாற்றத்தால மக்களையெல்லாம் அழிக்கும், அதை அழிக்கப் படாத பாடு பட்டு கடைசியில இல்லாத மேஜிக்கெல்லாம் பண்ணி கொல்லுவீங்க, ஆனாலும் மக்கள் மேல உங்களுக்கு அதீத நம்பிக்கைதான் போங்க".
"இருக்காதா பின்னே, பாருங்க எங்க ஹாலிவுட் மோகம் உங்க கோலிவுட்டையும் தொத்திக்கல சமீபத்திய "தசாவதாரம்" ஒரு உதாரணம் இல்லையா".
"வேணாம் தசாவதாரத்தை மட்டும் இங்கே இழுக்க வேண்டாம் அப்புறம் வலைப்பூல நம்ம படத்தை கிழி கிழின்னு கிழிச்சு ஒரு பய கூட தியேட்டர் பக்கம் வர விடாம பண்ணிடுவாங்க நம்ம வலைப் பதிவர்கள், இப்ப பாருங்க "குசேலன்" அவங்க கைல மாட்டிக்கிட்டு படாத பாடு படுது" பயந்தவராக இராமநாரயணன்.
"ஆமாமாம், எதுக்கு வம்பு அவங்க காசு வாங்கி விமர்சனம் பண்றவங்க இல்லை, உள்ளத்தில இருந்து வர்ரது" பாராட்டுகிறார் ஸ்டீவ்.
"ஆனால் என்னவோ தெரியல? என் படத்துக்கு மட்டும் அவங்க விமர்சனம் எழுதுறதே இல்லை" உலகமறியா இராமநாரயணன்.
ஸ்டீவ் "எப்படி முடியும், நான் சமீபத்தில உங்க இயக்கத்தில் ரோஜா இரட்டை வேடத்தில் நடிச்ச "கோட்டை மாரியம்மன்" படம் பார்த்தேன் ஐயோ அதுல உங்க சமர்த்தியத்த என்ன சொல்லி பாராட்ட, ஒரு ரோஜா அம்மன், மற்றொரு ரோஜா அம்மனின் கோவிலை சுத்தப்படுத்தி வணங்கும் கேரக்டர், இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள், வேப்பமரத்தில் பாதுகாப்பாக (?) இருக்கும் கண்மலர் அதைக் கைப்பற்றி அம்மன் சக்தியை தான் அடைய நினைக்கும் ஆந்திர வில்லன் மந்திரவாதி, சாமி பக்தி மிகுந்த மனைவி, வழக்கம்போல் அவருக்கு கடவுள் பக்தியில்லாத வில்ல கணவன் அவர்களுக்கு ஒரு குழந்தை என்று உங்களின் சற்றும் மாறாத பாணியில் கதைக் களத்தை கணகச்சிதமாக அமைத்திருந்தீர்கள். ஒரு கட்டத்தில் ரோஜா ஒரு சிறு தவறு செய்து விட உடனே அம்மன் ரோஜா கோபித்துக் கொண்டு பொய் சொன்ன காரணத்திற்க்காக உனக்கு தண்டனை "என்னை ஒருநாள் முழுதும் பார்க்கக் கூடாது" என்று ரோஜாவின் கண்களைக் கட்டி விடுகிறார். அதே போல் ரோஜா (வறுமை காரணமாக) திருட வந்த பூசாரியை கையும் களவுமாக பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைக்கிறார், குற்றத்தை நிரூபிக்க அம்மன் சன்னதி முன் சீட்டுக் குழுக்கப்படுகிறது. அம்மன் பூசாரியின் வறுமையின் காரணமாக சீட்டை மாற்றி பூசாரியை காப்பாற்றுகிறார். உடனே கோபம் கொண்ட ரோஜா பொய் சொன்ன காரணத்திற்க்காக அம்மனின் கண்களைக் கட்டுகிறார், சே! இந்த இடத்தில் உங்களின் புத்திசாலித்தனத்தை என்ன சொல்லிப் பாராட்டுவதே என்று தெரியவில்லை, எவ்வளவு அதி அற்புதமாக நீங்கள் திரைக்கதையைப் பின்னியிருக்கிறீர்கள், கண்களைக் கட்ட வேண்டாம் என்று அம்மன் ரோஜா கெஞ்சியும் கேட்காது, அம்மனின் கண்களைக் கட்டுகிறார் ரோஜா, என்ன அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சஸ்பென்ஸ் தாளாமல் சீட்டின் நுனிக்கே நான் வந்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், இந்த இடத்தில்தான் உங்களின் புத்திக் கூர்மை பளிச்சிடுகிறது, அம்மனின் கண்மலரை களவாட நினைக்கும் வில்லன் "ஹா.. ஹா.. இந்த நேரத்திற்க்குத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேன், அந்த நேரம் நெருங்கி விட்டது" என்று கூறுமிடமிருக்கிறதே, உங்களின் அதீத சிந்தனைச் சக்தியைப் பார்த்து நான் கண் கலங்கி விட்டேன். ஹாலிவுட்டையும் மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சியில் நீங்கள் புகுந்து விளையாடுகிறீர்கள். இதே படத்தில் வில்லன் கடைசியில் தேளின் ராட்சத கொடுக்குகளுடன் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்." ஸ்டீவ் சொல்லச் சொல்ல வெட்கத்தால் செய்வதறியாது தலை குனிந்து நிற்கிறார் இராமநாரயணன், ஒரு நிமிடம் அவரால் எதையும் பேச முடியவில்லை.
"நீங்க பேசாம ஹாலிவுட்டுக்கு வந்து விடலாம்" ஸ்டீவ் விடாமல்..
"என்னை மச்சிடுங்க ஸ்டீவ், நான் கோலிவுட்டுக்கு மட்டும் தான் கொலைச் ஸாரி ஸாரி கலைச் சேவை பண்ணுவேன், ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதீங்க" கெஞ்சுகிறார் இராமநாரயணன்.
இன்னும் இங்கிருந்தால் தன்னை தன் வலையில் விழ வைத்து விடுவார் என்றென்னிய இராமநாரயணன் கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் டைமைப் பார்த்து "உங்களிடம் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை, இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் தயாரிப்பாளரே என்னைத் தேடி வந்துவிடுவார்" என்று குரங்கு மற்றும் யானையுடன் விடை பெற்றுச் செல்லும் இராமநாரயணனை "என்ன ஒரு தொழில் பக்தி" என்று மெய் சிலிர்த்து வைத்த கண் வாங்காமல் அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டு நிற்கிறார் ஸ்டீவ்.